அமெரிக்கா: அமெரிக்க மற்றும் ஜப்பான் படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் கடற்கரையோரம் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மலபார் 2019 என்னும் முத்தரப்பு கடல்சார் பயிற்சி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஏவுகணைப்போர் கப்பல் ஐ.என்.எஸ் சகாயத்ரி, நீர்முழ்கி போர் கப்பல் ஐ.என்.எஸ். கில்டன் மற்றும் நீண்ட தூர கடல் ரோந்து கப்பல் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக ஜப்பானில் சசெபோவுக்கு இந்திய போர்கப்பல்கள் நேற்று சென்றடைந்தன.