இங்கிலாந்து: லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாணவி சுபாஷினி சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷினி. இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். பார்வை குறைபாடு உடைய இந்த பெண் சேலம் அயோத்யா பட்டணத்திலுள்ள பார்வை குறைபாடு உள்ளோருக்கான விடுதியில் தங்கியபடி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.