திருமலை: காதல் பறவைகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் பறவையை விட்டு பிரிந்து சென்ற பெண் பறவை மீண்டும் சேர்ந்தது குறித்த ருசிகர சம்பவம் நடந்ததுள்ளது. திருப்பதி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் பெங்களூருவில் இருந்து லைலா, மஜ்னு என்ற பெயரில் இரண்டு பறவைகளை கடந்த ஆண்டு 2 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார். இந்த பறவையை தனது வீட்டில் கூண்டு வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், லைலா மட்டும் கூண்டிலிருந்து அவ்வப்போது வெளியேறி பல இடங்களில் சுற்றிவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் கூண்டிற்கு வந்து மஜ்னுவுடன் கொஞ்சிக் கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் மஜ்னுவுடன் ஏற்பட்ட கோபமோ, என்னவோ தெரியவில்லை, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூண்டைவிட்டு வெளியேறிய லைலா மீண்டும் கூட்டிற்கு திரும்பவில்லை. இதனால் மோகன், லைலாவை பல இடங்களில் தேடி வந்தார்.