சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் இன்று காலை மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். மாலையில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும். நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு நேற்று முன்தினம் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று ஏராளமானோர் போட்டிப் போட்டு கொண்டு விருப்ப மனுக்களை அளித்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் விருப்ப மனு அளித்தவர்களிடம் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல்: மாலையில் வேட்பாளர் பெயர் அறிவிப்பு
- மனுதாரர்களுக்கு
- எம்.கே. ஸ்டாலின்
- நேர்காணல் நேர்காணல்
- வாக்காளர் தன்னார்வ தொண்டர்கள்
- வேட்பாளர் நியமனம்
- பேட்டியில்
- வேட்பாளர்