திருச்சி: நாமக்கல், கரூர், முசிறி ஆகிய 3 இடங்களில் கதவணைகள் அமைய உள்ளது என்று பொதுப்பணித்துறை பொறியாளர் தகவல் அளித்துள்ளார். திருச்சி முக்கொம்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தகவல் அளித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் காவிரி ஆற்றில் கதவணை அமைய சாத்தியகூறு உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.