ஈத்தாமொழி: குமரி கடற்கரையில் கிடந்த 3 மாத குழந்தை குறித்து போலீசார் வீடு வீடாக சென்று தீவிரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜாக்கமங்கலம் அருகே பொழிக்கரை கடற்கரை சாலையில் நேற்று மதியம் சுமார் 3 மாதமே ஆன ஒரு குழந்தையின் சடலம் அழுகி காய்ந்த நிலையில் கிடந்தது. ஈத்தாமொழி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கீதா புகார் அளித்தார். அதன் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் சடலம் உருக்குலைந்து இருந்ததால் அது ஆணா? பெண்ணா? என்பதை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. நாய் கடித்ததில் குழந்தையின் கை மற்றும் உறுப்புகளும் இல்லை.