பெங்களூரு: மஜதவை விட்டு விலக 20 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. நாராயணகவுடா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் மஜத எம்.எல்.ஏ. நாராயணகவுடா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு இக்கட்டான நிலை ஏற்பட பாஜ.வினரோ அல்லது காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவோ காரணம் கிடையாது. இது முழுக்க, முழுக்க தேவகவுடா குடும்பத்தினரின் சூழ்ச்சி மற்றும் சதி திட்டமாகும். டி.கே.சிவகுமாரின் வளர்ச்சி பிடிக்காத தேவகவுடா குடும்பத்தினர் சதி செய்து அவரை சிக்கலில் மாட்டி விட்டுள்ளனர்.