மஜதவை விட்டு விலக 20 எம்எல்ஏக்கள் தயார்: நாராயணகவுடா பரபரப்பு தகவல்

பெங்களூரு: மஜதவை விட்டு விலக 20 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. நாராயணகவுடா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் மஜத எம்.எல்.ஏ. நாராயணகவுடா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு இக்கட்டான நிலை ஏற்பட பாஜ.வினரோ அல்லது காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவோ காரணம் கிடையாது. இது முழுக்க, முழுக்க தேவகவுடா குடும்பத்தினரின் சூழ்ச்சி மற்றும் சதி திட்டமாகும். டி.கே.சிவகுமாரின் வளர்ச்சி பிடிக்காத தேவகவுடா குடும்பத்தினர் சதி செய்து அவரை சிக்கலில் மாட்டி விட்டுள்ளனர்.

கூட்டணிக் கட்சி ஆட்சியில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா அமைச்சர்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியும், தொல்லையும் கொடுத்து வந்தார். அவருடைய இந்த நடவடிக்கையால் பலர் இன்னலுக்கு ஆளாகினர். தேவகவுடா குடும்பத்தினரின் இந்த சதித் திட்டம் மஜத எம்.எல்.ஏ.க்களில் பலருக்கு பிடிக்கவில்லை. இதனால் 20 எம்.எல்.ஏ.க்கள் கட்சியைவிட்டு வெளியேற திட்டமிட்டு உள்ளனர். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

Related Stories: