சென்னை: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 2 வாலிபர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரர் சந்திரசேகர் என்பவர், போதை வாலிபர்களை எச்சரித்து, வீட்டுக்கு செல்லும்படி கூறினார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், போலீஸ்காரரை தாக்கி, அவரது சட்டையை கிழித்தனர். இதுகுறித்து போலீஸ்காரர் கொடுத்த தகவலனின் பேரில், அந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்துச் சென்று விசாரித்தனர். அதில், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் பரத்பிரசாந்த் (20), மனோஜ் குமார் (21) என்பது தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தண்டையார்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் கஞ்சா விற்ற புதுவண்ணாரப்பேட்டை திடீர் நகரை சேர்ந்த உலகநாதன், தண்டையார்பேட்டை 7வது குறுக்கு தெருவை சேர்ந்த மாலதி (34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.