வேலூர்: காட்பாடி அருகே ஆட்டோவில் டிரைவர் சீட் அருகே அமர்ந்து பயணம் செய்த பள்ளி மாணவி தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். காட்பாடி அடுத்த கீழ்வடுகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகள் மதுலேகா(12). வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பழைய காட்பாடி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் ஆட்டோவில் வீட்டிற்கு வந்தார். அதிகளவு பயணிகள் இருந்ததால் டிரைவர் சீட் அருகில் அமர்ந்தபடி மதுலேகா பயணித்துள்ளார். ஒரு வளைவில் ஆட்டோ நிலைதடுமாறியதால் மதுலேகா தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.