புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ திரும்பப் பெற்ற மத்திய அரசு அம்மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என்று கடந்த மாதம் 5ம் தேதி அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. செல்ஃபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க 3 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.