பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கப்பல் கேப்டன் கைது

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கப்பல் கேப்டன் கைது செய்யப்பட்டார். ஆதம்பாக்கம் இ.பி.காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் சாந்தி (33). இவர், நேற்று முன்தினம்  தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து   கோலம் போடுவதற்கு சென்றார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த லீமா என்பவரின் கார் அங்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால், காரை  சற்று தள்ளி நிறுத்தும்படி லீமாவிடம் சாந்தி தெரிவித்துள்ளார்.  ஆனால், லீமா அதெல்லாம்  முடியாது என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த லீமாவின் கணவர் பகத்சிங், சாந்தியின் சேலையை பிடித்து இழுத்து, அநாகரீகமாக நடந்து கொண்டாதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சாந்தி,  ஆதம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, பகத்சிங்கை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி   சிறையில் அடைத்தனர். கைதான பகத்சிங் தனியார் கப்பல் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: