சண்டிகர்: பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமடைய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால்தேவ் குமார் (43). இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கடந்த மாதம் இந்தியா வந்தார். தற்போது பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் தங்கி இருக்கிறார். இவர் இந்தியாவில் தனக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பால்தேவ் குமார் கூறுகையில், நாங்கள் அடைக்கலம் கேட்பதற்காக தான் இங்கு வந்தோம்.