சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூக்குழி இறங்கி இந்துக்கள் மொகரம் தினத்தை கொண்டாடி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஏராளமான முஸ்லீம் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் கட்டிய பள்ளிவாசலே பாத்திமா பள்ளிவாசல் ஆகும். தற்போது முதுவன்திடலில் ஒரு முஸ்லீம் குடும்பம் கூட இல்லை. வேலை தேடி மதுரை, திருப்புவனம் போன்ற ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். ஆனாலும் ஊருக்கு மத்தியில் உள்ள பாத்திமா பள்ளிவாசலை கிராமத்திலுள்ள இந்து மக்கள் நன்கு பராமரித்தும், வழிபட்டும் வருகின்றனர். இங்குள்ள இந்து மக்கள் பாத்திமாவை தேவதையாகவும், தங்களின் இஷ்ட தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து விதை நெல், அறுவடை செய்த முதல் நெல், விளைந்த காய்கறிகள், கரும்பு, வாழை என அனைத்தையும் பள்ளி வாசலில் வைத்து வழிபட்ட பின்னரே உபயோகப்படுத்துகின்றனர்.