தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றியதால் எதிர்ப்பு: நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள்

சென்னை: தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும், தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதனைதொடர்ந்து நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தனர். அதன்படி இன்று தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: