தன்பாத்: ஜார்க்கண்டில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் 4ம் வகுப்பு சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பிரபல தனியார் பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவளது பெற்றோர், டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த டாக்டர், அச்சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளி ஆசிரியர்கள் தன்னை பலாத்காரம் செய்த பயங்கர சம்பவத்தை கூறி அழுதுள்ளார். சம்பவத்தன்று, சிறுமி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் வகுப்பாசிரியர், சிறுமியை மருத்துவ அறைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுமாறு கூறி உள்ளார். அங்கு சென்ற சிறுமிக்கு, ஒரு மாத்திரை தரப்பட்டுள்ளது.