முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்தார்: மாணவி பகீர் பேட்டி

ஷாஜகான்பூர்: உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 23ம் தேதி அன்று சமூக இணையளத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில் தான் படித்த கல்லூரியை நடத்தி வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான சின்மயானந்த்(72) தன்னை பாலியியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்றும் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் புகார் கூறினார். மறுநாள் இவர் மாயமானார். இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் காணாமல்போன அந்த மாணவி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் ஷாஜகான்பூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சின்மயானந்த், என்னை பலாத்காரம் செய்தார். ஓராண்டுக்கு மேலாக எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் வீடியோ உட்பட அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவர் பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்றார். இந்த புகார் குறித்து சின்மயானந்த் வக்கீல் கூறுகையில், ‘‘இது போலியான குற்றச்சாட்டு. மாணவி ₹5 கோடி கேட்டு மிரட்டுகிறார்’’ என்றார்.

Related Stories: