மதுரை: மதுரையில் இரவு ரோந்துப் பணியின் போது போலீசாரை தாக்க முயன்ற 3 பேரில் 2 பேரை போலீசார் கைது ெசய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர்.மதுரை நகர் பகுதிகளில் போலீசார் தினமும் இரவு முதல் அதிகாலை வரை வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் ேசாதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10.30 மணியளவில், தெப்பக்குளம் பகுதியில், எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் தலைமையில் 3 போலீசார் ரோந்து சென்றனர்.காமராஜர் சாலை தென்கரை ரோட்டில் சென்றபோது, ஒரு ஆட்டோவில் அமர்ந்து சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். மேலும் அவர்களுக்குள் சத்தம் போட்டு தகராறு செய்துள்ளனர். சத்தம் கேட்டு, அங்கு போலீசார் சென்றனர். ஆட்டோவில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் போக்குக் காட்டியபடியே, ஆட்டோவை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை நிறுத்தியபோது திடீரென போலீசாரை சட்டையை பிடித்து தாக்க முயன்றனர். உடனடியாக எஸ்ஐ சிவராமகிருஷ்ணன், தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதில் 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.