ஈரோடு: 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொன்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர், ஈரோட்டில் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பாலியல் தொல்லைகளில் ஈடுப்படும் ஆசிரியர்களால் நல்லாசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்று கவலை தெரிவித்தார்.