புதுச்சேரியில் பாரம்பரியமிக்க ஞாயிறு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிறு சந்தையை  வேறு இடத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள பாரம்பரியமிக்க சந்தையை  போக்குவரத்து நெரிசலுக்காக வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று கோஷமிட்டபடி பலவேறு தரப்பினரும்  500க்கும் மேற்பட்ட வியாபாரிகளும்  சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள காவல்த்துறையினர்  தடுத்தி நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related Stories: