சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வசிப்பவர் வாசு (60). இவர் நேற்று முன்தினம் மாலை மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சீமாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்று மேம்பால சர்வீஸ் சாலையில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து, துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த 300ஐ பறித்துக்கொண்டு, தப்பினர்.அப்போது, மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி போலீசார், பைக்கில் தப்பி ஓட முயன்ற அந்த 2 பேரை விரட்டி பிடித்து, மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர்.