பீஜிங்: வர்த்தகப்போரை தணிக்கும் விதமாக அடுத்த மாதம் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, சீனா சம்மதித்துள்ளன. அமெரிக்கா - இடையே வர்த்தக பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்காதான். அதோடு, தனது நாட்டின் அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்த பிணக்கின் உச்சகட்ட வெளிப்பாடாக, இரு நாடுகளும் பழிக்குப் பழியாக நடவடிக்கையாக இறக்குமதி வரியை அதிகரித்தன. இதனால், அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்த கதியில் உள்ளது. இந்த நிலையில், வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்கா - சீனா இடையே உயர் மட்ட குழு பேச்சுவார்த்தை வாஷிங்டனில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.