அமெரிக்காவில், செயற்கை ஆய்வகம் அமைத்து பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
சுற்றுசூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் வாழும் சில வகை பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், பவளப்பாறைகளை செயற்கை முறையில் வளர்த்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்யும் நோக்கிலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புளிரோடாவின் தம்பா பகுதியில் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்கினர். கடந்த 2017ம் ஆண்டு லண்டன் அருங்காட்சியகம் ஒன்றின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வகத்தில், கடலுக்கு அடியில் இருப்பது போன்ற சூழலியலை உருவாக்கும் வகையில் நீரின் வெப்பம் கண்காணிக்கப்பட்டது.