பரமக்குடி: பரமக்குடியில் செப்.11ம் தேதி நடைபெறும் இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். வரும் செப்.11ம் தேதி நடைபெறவுள்ள குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. மாவட்டம் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாகனங்களுக்கு எப்போதும் உள்ள நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.