வருஷநாடு: வருஷநாடு பகுதியில் முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், வருஷநாடு மற்றும் அருகில் உள்ள முருக்கோடை, மயிலாடும்பாறை கடமலைக்குண்டு, அய்யனார்கோவில், துரைச்சாமிபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் வறட்சி காரணமாக கடந்த மாதம் வரை முருங்கை மரங்களில் முருங்கை காய்கள் சரிவர விளையாமல் இருந்தது.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.