அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.அதேபோன்று பூமியில் மோதி ஆபத்து விளைவிக்கக்கூடிய விண்கற்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.இதன்படி பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் மற்றுமொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.1990 MU எனும் விண்கல்லே இவ்வாறு பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.