சேலம்: 2 நாள் மக்கள் குறைதீர் முகாமில் பெறப்பட்ட 13,298 மனுக்களுக்கு 4 வாரத்தில் தீர்வு காணப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். நேற்று நடந்த மக்கள் குறை தீர் முகாமில் 4,062 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. வாழப்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 9,236 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.