பல சோதனைகளை தாண்டி எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவையை நடத்தி வந்தேன்: ஜெ.தீபா பேட்டி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர், பல சோதனைகளை தாண்டி எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவையை நடத்தி வந்தேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான் தொடங்கிய பேரவையை அதிமுகவில் இணைக்க வேண்டிய முடிவை எடுத்துள்ளேன். அதிமுகவில் இணைவதை பேரவையின் நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றவே அதிமுகவுடன் இணைகிறோம். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அரசியல் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: