இங்கிலாந்து: இங்கிலாந்தின் மின்சார மையம் வெடி வைத்து தகர்க்கபட்டது.அப்போது ஏற்பட்ட அதிர்வில் மின்கம்பங்கள் தீ பற்றி எரிந்ததால் 40,000 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டுஷையர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் மூன்று கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த கோபுரங்களை இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷையர் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து 375 அடி உயர கொண்ட மூன்று கோபுரங்களும் வெடிவைத்து நொடி பொழுதில் தகர்க்கப்பட்டன.