சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு இன்று மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை: தலைவர் கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும்-திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூளையாக செயல்பட்டவரும்-மத்திய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் மலர் மாலை அணிவிக்கின்றனர்.