சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிக்கை: வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவற்றை தலைநகர கொண்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கிய அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். வேலூர் மாவட்ட மக்கள் சார்பில் அரசுக்கு பாராட்டுகள். அதேபோல நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக பிரித்து, 28 ஆண்டு கால கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.