சென்னை: முப்படைகளுக்கு ஒரே தளபதி என்பது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக இந்தியா மாறியுள்ளது. பலமான ராணுவ கட்டமைப்பை நாடு சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக வலுப்பெற செய்யப்பட்டுள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை என முப்படைகளுக்கு தனிதனியே தளபதிகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.