நாட்டின் பாதுகாப்பில் அரசியல் கலக்ககூடாது ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்த பேட்டி:  

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தமாகா வரவேற்கிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பற்றி ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அவரவர் மனநிலையை பொறுத்தது. நாட்டின் பாதுகாப்பில் அரசியல், சாதி, மதத்தை கலக்கக்கூடாது. இதற்கு அப்பாற்பட்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சுதந்திர தின விழாவில், தியாகிகளின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாவட்டம் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதும் வரவேற்கதக்கது.

Related Stories: