சென்னை: வில்லிவாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய், தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.கடந்த 13ம் தேதி நான், எனது அறையில் தூங்கிக் கொண்டு இருந்தபோது, எனது தந்தை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதுபற்றி எனது தாயிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. எனது தந்தை செய்த காரியம் எனக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.