கோவா: கோவாவில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் அந்த விமானம் தரையிரங்க இருந்த நிலையில் ஓடுதளத்தில் 5 முதல் 6 தெரு நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்கும் முடிவை கைவிட்ட அவர் வானிலேயே வட்டமடிக்க ஆரம்பித்தார்.