காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள், விமானம் தேவையில்லை : ஆளுநருக்கு ராகுல் காந்தி பதில்

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள், விமானம் தேவையில்லை என்று காஷ்மீரில் சுமூகநிலை நிலவுவதாகக் கூறிய ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். ஆளுநர் அழைத்ததால் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தானும் இணைந்து காஷ்மீர் வரத் தயார் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் பயணம் மேற்கொள்ள தயார் என்றும் காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள தலைவர்களையும் சுதந்திரமாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

Related Stories: