பெங்களூரு: அரசியலை விட்டு விலகலாமா என யோசித்து வருகிறேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்தது. முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி ராஜினாமா செய்தார். பின்னர், எடியூரப்பா தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுவதாவது; அரசியலில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்த நான் எதிர்பாராத விதமாக முதல்வர் ஆனேன்.