கும்பகோணம் கோர்ட்டில் இயக்குனர் பா.ரஞ்சித் ஆஜர்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் கடைத்தெருவில் கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், ராஜராஜசோழனை பற்றி அவதூறாக பேசினார். இதை தொடர்ந்து அவர் மீது 3 பிரிவுகளின்கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, பா.ரஞ்சித், ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, கும்பகோணம் கோர்ட்டில் இருநபர் ஜாமீன் கொடுத்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டனர். இதன்படி, கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஆஜரானார். அவரிடம், இருநபர் ஜாமீனை நீதிபதி ஏற்று இன்று (புதன்) முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைதொடர்ந்து அவர் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories: