சென்னை: மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்த ஆட்டோ டிரைவரிடம் செல்போன் திருடியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த 5 ரவுடிகள் 7 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 ரவுடிகளையும் கைது செய்தனர். மண்ணடி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). ஆட்டோ டிரைவர். கடந்த 17ம் தேதி இரவு மெரினா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திருவல்லிக்கேணியை சேர்ந்த ரவுடி பிரகாஷ் (30) என்பவர் கலியமூர்த்தி ஆட்டோவில் இருந்த செல்போனை திருட முயன்றார். இதை பார்த்து சக ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து பிரகாஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றனர்.