7 ஆட்டோவை உடைத்த 5 ரவுடிகள் பிடிபட்டனர்

சென்னை: மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்த  ஆட்டோ டிரைவரிடம் செல்போன் திருடியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த 5 ரவுடிகள் 7 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 ரவுடிகளையும் கைது செய்தனர்.  மண்ணடி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (45). ஆட்டோ டிரைவர். கடந்த 17ம் தேதி இரவு மெரினா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.

 அப்போது திருவல்லிக்கேணியை சேர்ந்த ரவுடி பிரகாஷ் (30) என்பவர் கலியமூர்த்தி ஆட்டோவில் இருந்த செல்போனை திருட முயன்றார். இதை பார்த்து சக ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து பிரகாஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றனர்.

இந்த தகவலை ரவுடி பிரகாஷ் கூட்டாளிகளுக்கு தெரிவித்ததால் உடனே உருட்டு கட்டைகளுடன் வந்த 4 பேர் பிரகாஷுடன் சேர்ந்து சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 7 ஆட்டோக்களை அடித்து நொறுக்கி விட்டு 5 பேரும் தப்பினர்.  இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் கலியமூர்த்தி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி பிரகாஷ் மற்றும் அவனது கூட்டளிகளான திருவல்லிக்கேணி அசுதீக்கான் தெருவை சேர்ந்த முரளி (20), கண்ணகி சிலை அருகே பிளாட்பாரத்தை சேர்ந்த கஜேந்திரன் (18), திருவல்லிக்கேணி தேவா (20), அறிவழகன் (24) ஆகிய 5 ரவுடிகளை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: