ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக சட்டமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். அவர் அதனை தெரிவித்த அடுத்தடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு மத்திய அரசு அடுத்தடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை என்ற கொள்கை முடிவை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவைம், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: