வாஷிங்டன்: F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டின் வான் பரப்பு அமைந்துள்ள அங்காரா பகுதியை பாதுகாக்கும் வகையில், அந்நாடு ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை பெற்றுள்ளது. அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையை மீறி துருக்கி ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வரவழைத்தது. இதனைத்தொடர்ந்து, துருக்கி நாட்டிற்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யபோவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்தது.