சென்னை: சட்டப் பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் கலந்து கொண்டு வேடசந்தூர் பரமசிவன்(அதிமுக) பேசியதாவது: அரசு பள்ளி மாணவர்களை மருத்துவர்களாக்கும் வகையில், 9ம் வகுப்பிலே அதற்கு ஏற்றவாறு படிக்கும் மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு என்று அரசு பள்ளிகளில் தனி குரூப் ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்வது பகலில் மட்டுமே நடக்கிறது. 6 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. தற்போது எல்இடி உள்ளிட்ட நவீன லைட்டுகள் எல்லாம் வந்துவிட்டது. எனவே இரவிலும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.