உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம்

காங்கயம்: காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாளிபாளையம் கிராமத்தில் நேற்று உயர் மின் கோபுரம் அமைக்க நிலத்தை சர்வே எடுக்க பவர் கிரிட் நிறுவனத்தினர்  அளவீடு செய்ய சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நிலத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விவ சாயிகளுடன் சமாதான பேச்சு வார்த்தை  நடத்தி கொண்டிருந்த போதே நிலத்தை அளவிடும் பணி நடந்தது. மேலும் அங்கு பதற்றம் ஏற்படா மல் இருக்க அப்பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: