காவிரிநீரை பெற்று தர வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உண்டு: வாசன் அறிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் பிறப்பித்த உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை காலத்தே முறையாக, முழுமையாக திறந்துவிட வேண்டும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இருக்கிறது.கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்ததோடு, தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

Related Stories: