தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று கூறினார்.

Related Stories: