சென்னை: “தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் தமிழக அரசு ரூ.2000 சிறப்பு நிதியை வழங்காமல் தாமதிப்பது ஏன்?” என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக, தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளிகள், ஓட்டல்கள், தனியார் விடுதிகள் போன்றவை மூடக்கூடிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தண்ணீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்று என அரசை கேட்டு கொள்கிறேன். அதே போன்று கடந்த பிப்ரவரி 11ம் தேதி தமிழக சட்டப்பேரவைில் முதல்வர் தமிழ்நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்தார்.