வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த ஏ.குமாரபாளையத்தில் நள்ளிரவு கோயிலின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், 200 ஆண்டுகள் பழமையான 3 சுவாமி சிலைகளை திருடிச்சென்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள ஏ.குமாரபாளையம்போயர் தெருவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான சென்னப்பன், ஆதிலட்சுமி, துளசிலட்சுமி சுவாமி கோயில் அமைந்துள்ளது. சாதாரண வில்லை ஓட்டு கட்டிடத்தில் உள்ள இந்த கோயிலில் 2 அடி உயரமுள்ள 3 சிலைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், கோயிலின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், 3 சுவாமி சிலைகளையும் திருடிச் சென்று விட்டனர்.