பெரம்பூர்: துறைமுகம் மேற்கு பகுதியில், பொதுமக்களுக்கு இலவச குடங்கள் வழங்கி அவர்களுக்கு தயாநிதி மாறன் எம்பி குடிநீர் விநியோகம் செய்தார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குடிநீர் பிரச்னைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினர் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோல் சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி 60வது வட்டத்துக்கு உட்பட்ட ரேவ் பகுதி மக்கள் குடிநீர்