சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா வெளியிட்ட அறிக்கை:
இந்திய மொழிவழி மாநில பிரிவினையை எதிர்த்த ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் மட்டுமே போதும் என்று கூறப்பட்டிருந்தது. அதை, இப்போது பாஜ அமல்படுத்த முயற்சிக்கிறது. இது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், பன்முக ஜனநாயகத்திற்கும் எதிரானது மட்டுமல்ல, ஆபத்தான பாசிசத்தை நோக்கி நாட்டை அழைத்துச்செல்லும்.