புதுடெல்லி: ஜப்பானில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.