குலு: குல்லு மாவட்டத்திற்கு உட்பட்ட பன்சர் நகரில் இருந்து கதுகுஷானி என்ற இடத்திற்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. ,மேலும் 42 இருக்கைகள் கொண்ட அந்த பேருந்தில் சுமார் 70 பேர் ஏற்றப்பட்டிருந்ததாகவும் அவர்களில் பலர் பேருந்தின் கூரை மேல் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது ஒரு வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து பேருந்தின் கூரை மேல் பயணம் செய்தவர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மக்களும், மீட்பு குழுவினரும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.